Sunday, December 27, 2009

காதலின் கடைசி துளி ..,


முன்பனி புடைசூழ
மூழ்கி குளித்து,

முன்னிரவு கனவு மறந்து,
விரல் தொடும்
பனி ஓட - உருதிடும் உடலென,
மெல்லத்தான்,
தொட்டு துடைக்க...,

"சோ! வென்று
கொட்டிய மழையில்,
பூ விதழ் தாங்காது -
உடல் மெலிந்து , வளைந்து ,
பிரியும் போது
வாசத்தையும்
துளியோடு சேர்த்து,
தவறவிடும் - சோகத்தில்,
ஆடி அசைந்து,
விடை கொடுக்கும்
ஒரு துளியாய்,"

ஓடி வந்தது
அவள் கண்களில் ....

"நானும் விடைகொடுக்க பட்டேன்" ........
"காதலை மட்டும் சுமந்து".......

Friday, December 25, 2009

அனாதை




உயிரோடு நான் வாழ
உதிரத்தை கருவாக்கி
உயிர் கொடுத்த தாயே...,
கருவில் நான் - வாழ,
கவலையோடு நீ - வாழ,
- அதிகமாக உதைதேனோ - அம்மா?

மண்ணில் வீழ்ந்த என்னை,
மடியில் தாங்காமல் - வெருத்ததேனோ?
- கறுப்பாக இருந்தேனோ - அம்மா?



மார்போடு எனை தாங்கி
கள்ளிப்பால் கொடுத்தாலும்
விஷமென்று தெரிந்தாலும்
விரும்பியே கலம் பால் குடித்திருப்பேன்,
தொட்டிலில் எனை போட்டு
தூரசென்றாயே - அம்மா,
நான் செய்த குற்றமென்ன?

கொஞ்சி விளையாடும் வயது,
கொஞ்சிட நீ - யில்லை
கவலையோ, களிப்போ
கொஞ்சமும் - என்
நெஞ்சில் - ஈரமில்லை...,

மரத்து போன மனமாய்
மன்றாடி வேண்டுகிறேன் ...,

காலம் - எனை கடக்குமுன்பே,
என் எதிரே நீ வேண்டும்,
அன்று உன் மடியிலேயே
என் உயிரும் ....

Friday, December 18, 2009

"ஒரு ஞானியை போல்"
மழைநீருக்கு காத்திருக்கும்
விதைபோல்...
காதலிக்க தயாராகிவிட்டேன்...
"காத்திருக்க
கற்றுகொண்டேன்"
மறு ஜென்மம்
எப்போது?....