Saturday, January 29, 2011

தந்தை

தோளிலும் மார்பிலும்
தூங்காத - என்னை
சுமந்து
எத்தனை இரவுகள்
நடந்தாயோ...,

மார்பில்
உதைத்த
கால்களுக்கு
முத்தமிட்டு
சிரிப்பாயே...,

உள்ளதை,
ஊட்டிவிட்டு
வயிற்றில்
என்னை சுமந்து
தூங்க வைத்தாயே..,

கட்டியணைத்து
தூங்குவது போல்
பாதி காச்சலை
பக்குவமாய்
திருடுவாயே...,

பட்டடை
எனக்குடுதி - நீ
பழைய துணியோடு
ரசிப்பாய்யே...,

சிந்திய வியர்வை
துளிகளுக்கு...,
அழகழகாய்
பொம்மைகள் - வாங்கி
என் சிரிப்பில்
இளைப்பாருவாயே...,

மண்ணில் - நான்
வீழுந்த - நாள்முதல்
எத்தனை
சுகங்கள்
இழந்தையோ
எனக்காக...,

என்ன தவம்
செய்தேனோ,
தந்தையென
உங்களை பெற...,

மார்பில் சுமக்க
தவறிய நான்
மனதில் சுமக்கிறேன்
குழந்தையாக...,



என் இந்தியா

வல்லரசை
நோக்கி
இந்தியா...,

இன்னும்
குடில் இன்றி
தெரு புழுதியிலே
புரளும் புழுக்களோடு
புழுக்களாய்....,

உடுத்தினால் தானே
மாற்ற - இன்னும்
மாற்றக்கூட
வழி இல்லாத,
இடுப்பு கயிறோடு - மட்டும்
எத்தனையோ
மக்கள்...,

அடித்து செல்லும்
ஆங்கில - மோகத்தில்
அம்மா - என்றால்
அழுகிறாள்...,

கஞ்சிக்கே
வழி யில்லா
அவளுக்கு - எப்படி
பால் சுரக்கும்?.....,
முதற்பார்வைலேயே,
முழமையாக
இழந்துவிட்டேன்
என்னை...,

உனக்காகவே
எந்தன் சுகங்கள்
மாற்றப்பட்டன,
உனக்கு தெரியாமலேயே...,

நான் செதுக்கிய
வார்த்தைகளுக்கு
சிலையானாய்...,

என்ன செய்வேன்,
மௌனமனாலும்
உன் நினைவில்
மனம் வாடுகிறது...,
பொய்யான
பெயர் சூட்டி
அழைத்திடவே,
எவருமறிய
புன்னகையை
எனக்குமட்டும்
தருவாயே...,

எனக்கெப்படி
தெரியும்
பொய்யான
புன்னகையென்று...,

என்னுயிர்
உன்னை தொடர்ந்து
வந்தது,
பாவம்
உனக்கெப்படி
தெரியும்...,

இங்கே காதல் மட்டும் வாழ்கிறது

என்னவளை
இழந்து
இன்னமும்
உயிரோடு...,

உயிரும் காதலும் ஒன்றே

இழக்கபோவது
தெரிந்தும்
இத்தனை
அன்புதான்
எதற்க்கு...,


காதலோடு நான் மட்டும்

காலம்
நம்மை
பிரித்தாலும்,
என்றாவது
சந்திப்போம்
சொர்க்கத்தில்..,

அன்றும்
உன் - நினைவில்...,

கேள்வி

உயிரோடு
என்னை கொள்ள
உறவாடி வந்தாயோ?
நீங்காத துயரமக்கி
என்னைவிட்டு
நீங்கிவிடுவாயோ...,

நிஜம்

ஒவொரு
நிலவிலும்
என்னவளின்
முகம் மட்டும்
தெரிகிறதே...,
என் மூடிய
போர்வையின்
ஒவ்வொறு
இழையின்
இடையிலும்....,

Friday, January 28, 2011

வலியோடு நான்

உடலை விட்டு உயிர் பிரிந்தால்
உறங்கி விடும்
எந்தன் கண்கள்,
உறங்க மறுப்பதேனோ...,

மனம் சூழ்ந்த - உன்
நினைவுகள்
மறைவது கண்டு,
உறைந்து நின்ற இதயத்தில்
உருகி ஓடும்
கண்ணீர் துளிகள்
நீ - அழுவதலோ?...,

மறையாமல் தொடங்கும்
உன் நினைவுகள்
என் சோகத்தை
மறைத்தாலும்
முடியவில்லை - எந்தன்
கண்களுக்கு...,

மௌனமாய் நான் இருக்கும் - நேரம்
மன்றாடி வேண்டுகிறேன்
முடியுமா? தெரியவில்லை...,

உன்னோடு
வாழ்ந்துவிட ஆசை,
உன் நிழலில்
வாடிவிட ஆசை,
நிறைவேறா ஆசையில்
நின்று விடுமோ?...,

பெறாத பிள்ளைக்கு - பேர் சூட்டி
வளர்த்திட்ட சோகமென்ன ...,
விடியல் வருமுன்னே
கலைந்து விடும்
கனவாகவே...,

விடிந்தாலும் உறங்காமல்...
உன்னோடு வாழ்ந்தகாலம்
மறந்தாலும் மறையாதே,
இவ்வுடல் என்னை விட்டு
பிரிந்தாலும் மறையாதே...,
நான் செய்த குற்றமென்ன...,

உன்னோடு வாழ்ந்த காலம்
என்னில்
கனவாய்தான் போகுமோ?...,

ஆசை

இன்னமொரு புதிய உலகம்...,
அதில் என்னோடு நீ-மட்டும்...,
எதிர்பே இல்லா உலகில்
காதலர்களாய்
நாம் மட்டும்...,
ஒருவரை ஒருவர்
விழுங்கிக்கொள்வோம்
பார்வை -யினாலே...,

யாரும் இல்லா உலகில்
ஜென்ம ஜென்மமாய்
வாழ்ந்திடுவோம்
குழந்தைகளாகவே ...,

என் காதலி

மயக்கும் உன் விழிகள்
மௌனமாய் என்னை
கொள்ளுதடி...,

நீ - சிரிக்கும் அந்த
ஒவ்வொறு சிரிப்பிலும்,
ஏதோ ஒரு மாற்றம்
எனக்குள்ளே தோன்றுதடி...,

அன்று ஒருநாள்
என்னருகே -
அந்த அழகே
இயற்கை அழகை
ரசிக்கிறதே - என்று
இயற்கையே,
வெட்கத்தில் முழ்க...,

பூலோக பெண்களே,
வெட்கும் வகையில்
நேராக வந்துவிட்டயோ
என் கண்களுக்கு
விருந்தாய்!
தேவலோக தேவதையாக...,

அன்பே,
ஆயிரம் பேரின்
கனவு கன்னிதான் - நீ
வானுலகை வட்டமடிக்கும் பொது ...,

கவிதை எழுதும் போதும் கூட,
உன்னை வர்ணித்தல் தான்
இனிமை சேரும்,
காதலிக்கும் இளைஞ்சர்களுக்கு,

அந்த அழகு நிலவே,
உன்னை கண்ட நாள் முதல்,
இன்னும் அம்மாவாசையகவே...,

நிலவிற்கும்,
நெருப்பிற்கும்
பிறந்தவளே!
என்னை
நிம்மதியாக
இருக்க விடுவாயா?

நீயும் என் நினைவும்

அழகு பதுமையே
வாய் திரந்து பேசு...,

ஊமையாகிவிடும்,
உன்னருகே,
எனக்கே சொந்தம்
மௌனம் மட்டும்...,

உனக்கென்ன
என் விழிகள் தானே
வெட்கத்தில் மூழ்கும்...,
நீ - என்னை விழுங்கும் வரை...,

செவ்விதழ் சிரிப்போடு,
சிதறும் முத்துக்கள்
எந்தன் சிந்தனைக்கு
தீபமாய்,
உன் நிழலைகூட
படமாக்கும் -என் நினைவோ
உன் ஒவ்வொறு அசைவையும்
மீண்டும் மீண்டும் ...,

நீ -யில்லா நேரத்தில்,
அந்த - அழகான
நாட்களின்
நினைவோடு...,
தனிமை - யில் என்னை
தவிக்க விடுகிறாயே....,