Saturday, February 5, 2011

தாய்மை

சுகத்தில் பெற்ற
ஸ்வர்ணமே,

உன்னை பெற -
நான் பெற்ற
உணரமுடியா
துன்பங்கள்,
அத்தனையும் - மண்டியிட்டு...,

கட்டி நீ தந்த,
கண்தெரிய
முத்தத்தில் -
அத்தனையும்
சுகமேவியாய்...,

உந்தன் -
பட்டு மேனி
தொட்டு
உணர்கிறேன்,
எந்தன்
தாய்மையை...,

காதலோடு நானும் என் நிழலும்

துயில் களைந்து
துரசென்றாய்,
உனக்கு தெரியாமலே,
உன் பின்னே
தொடர்ந்தேன்...,

மறையும் சூரியனை
மனதிற்கு உணர்த்த
உன் எதிரே
மௌனமாய் நின்றேன்...,

என்னை நீ
மிதித்தாலும் - உன்
பாதம் தானே எனக்கு
புகலிடம்...,

நீ - சிரித்தல் மகிழ்கிறேன்,
அழுதால் கரைகிறேன்,
நனைந்தால் மறைகிறேன்,
வெறுத்தல் உறைகிறேன்...,

உன் விழிகள்
என் முகம் காண,
என்னை மறந்து
தலை சாய்கிறேன்
வெட்கத்தில்...,

உன்னோடே வாழ்கிறேன்,
உன்னை தொடர்ந்தே
வருகிறேன்...,
என்றென்னை - கண்கொண்டு
காண்பாயோ...,
என் காதலை,
என்று - நீ
உணர்வாயோ...,
உன் இதயத்தில்
என்று - நீ
இடம் தருவாயோ...,

உன் உடல் மட்டும்
உறங்குமோ,
அன்றும்,
உன் அழகை
ரசித்தபடியே,
உன் மடியில்
நான் மட்டும்...,