Thursday, July 16, 2009

தனிமை



கொலை குற்றவாளியோ?
தேசதுரோகியா
என் எப்படி?
அனாதையாக ....

தனிமையை கட்டிக்கொண்டு
ஜன்னல் - வழி பார்த்து,
நொடி நகர
நூறுமுறை கடிகாரம் பார்த்து
அப்பப்பா...,

தூக்கில் போடு
துடிக்கும் நேரம் மட்டும் வலி ....,

எனக்கோ,
கருப்பு துணி போர்த்தி
கழுத்தில் கயிர் போட்டு
காத்திருக்க முடியவில்லை....,

நினைஉகளால் மெழுகானேன்













தீபம் அணைந்தது ...,
இருள் சூழ்ந்தது,
"தீபமும் இல்லை
ஒளியும் இல்லை..., "
ஆனாலும்,
இப்போதும்
உருகுகிறேன்....

Wednesday, July 15, 2009

காதல்

அழிய போவது தெரிந்தும்
காத்து நிற்கிறதே -
கதிரவனுக்காக...,
பனித்துளிகள் ....,

Tuesday, July 14, 2009

செய்யா உதவி

மாலை வந்தால் மரணம்,
மண்டியிட்டு கேட்டது -
" பறித்து விடு
பறித்து எடுத்து விடு"
- ஏதாவது ஒரு தேவதையின்
கூந்தலில் சேர்..,
"என்னையும்
புண்ணியமடைய செய் ... "
தென்றலில் -
இதழ்கள் பேசியது ....,

தேவதைக்கு எங்கு செல்ல ...
"ஒருத்தி இருந்தாள்,
உயிரில் கலந்தாள்,
சுவடுகள் மட்டும் தந்து,
பாதை விலகி நின்றால் ...,

நினைவுகளோடு - நான்
நிலவாகவே - அவள்,
பாவியானேன்...., "

- இவன் கைபட்டால் ...,

உன் தேகம் கருக்கும்,
நீ - யும், என்னை போலவே
நன்றாக சிரிப்பாய்,
நடை பிணமாகவே ...

மன்னித்து விடு என்னை ......