துயில் களைந்து
துரசென்றாய்,
உனக்கு தெரியாமலே,
உன் பின்னே
தொடர்ந்தேன்...,
மறையும் சூரியனை
மனதிற்கு உணர்த்த
உன் எதிரே
மௌனமாய் நின்றேன்...,
என்னை நீ
மிதித்தாலும் - உன்
பாதம் தானே எனக்கு
புகலிடம்...,
நீ - சிரித்தல் மகிழ்கிறேன்,
அழுதால் கரைகிறேன்,
நனைந்தால் மறைகிறேன்,
வெறுத்தல் உறைகிறேன்...,
உன் விழிகள்
என் முகம் காண,
என்னை மறந்து
தலை சாய்கிறேன்
வெட்கத்தில்...,
உன்னோடே வாழ்கிறேன்,
உன்னை தொடர்ந்தே
வருகிறேன்...,
என்றென்னை - கண்கொண்டு
காண்பாயோ...,
என் காதலை,
என்று - நீ
உணர்வாயோ...,
உன் இதயத்தில்
என்று - நீ
இடம் தருவாயோ...,
உன் உடல் மட்டும்
உறங்குமோ,
அன்றும்,
உன் அழகை
ரசித்தபடியே,
உன் மடியில்
நான் மட்டும்...,
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment