Saturday, January 29, 2011

தந்தை

தோளிலும் மார்பிலும்
தூங்காத - என்னை
சுமந்து
எத்தனை இரவுகள்
நடந்தாயோ...,

மார்பில்
உதைத்த
கால்களுக்கு
முத்தமிட்டு
சிரிப்பாயே...,

உள்ளதை,
ஊட்டிவிட்டு
வயிற்றில்
என்னை சுமந்து
தூங்க வைத்தாயே..,

கட்டியணைத்து
தூங்குவது போல்
பாதி காச்சலை
பக்குவமாய்
திருடுவாயே...,

பட்டடை
எனக்குடுதி - நீ
பழைய துணியோடு
ரசிப்பாய்யே...,

சிந்திய வியர்வை
துளிகளுக்கு...,
அழகழகாய்
பொம்மைகள் - வாங்கி
என் சிரிப்பில்
இளைப்பாருவாயே...,

மண்ணில் - நான்
வீழுந்த - நாள்முதல்
எத்தனை
சுகங்கள்
இழந்தையோ
எனக்காக...,

என்ன தவம்
செய்தேனோ,
தந்தையென
உங்களை பெற...,

மார்பில் சுமக்க
தவறிய நான்
மனதில் சுமக்கிறேன்
குழந்தையாக...,



No comments:

Post a Comment