Friday, January 28, 2011

ஆசை

இன்னமொரு புதிய உலகம்...,
அதில் என்னோடு நீ-மட்டும்...,
எதிர்பே இல்லா உலகில்
காதலர்களாய்
நாம் மட்டும்...,
ஒருவரை ஒருவர்
விழுங்கிக்கொள்வோம்
பார்வை -யினாலே...,

யாரும் இல்லா உலகில்
ஜென்ம ஜென்மமாய்
வாழ்ந்திடுவோம்
குழந்தைகளாகவே ...,

என் காதலி

மயக்கும் உன் விழிகள்
மௌனமாய் என்னை
கொள்ளுதடி...,

நீ - சிரிக்கும் அந்த
ஒவ்வொறு சிரிப்பிலும்,
ஏதோ ஒரு மாற்றம்
எனக்குள்ளே தோன்றுதடி...,

அன்று ஒருநாள்
என்னருகே -
அந்த அழகே
இயற்கை அழகை
ரசிக்கிறதே - என்று
இயற்கையே,
வெட்கத்தில் முழ்க...,

பூலோக பெண்களே,
வெட்கும் வகையில்
நேராக வந்துவிட்டயோ
என் கண்களுக்கு
விருந்தாய்!
தேவலோக தேவதையாக...,

அன்பே,
ஆயிரம் பேரின்
கனவு கன்னிதான் - நீ
வானுலகை வட்டமடிக்கும் பொது ...,

கவிதை எழுதும் போதும் கூட,
உன்னை வர்ணித்தல் தான்
இனிமை சேரும்,
காதலிக்கும் இளைஞ்சர்களுக்கு,

அந்த அழகு நிலவே,
உன்னை கண்ட நாள் முதல்,
இன்னும் அம்மாவாசையகவே...,

நிலவிற்கும்,
நெருப்பிற்கும்
பிறந்தவளே!
என்னை
நிம்மதியாக
இருக்க விடுவாயா?

நீயும் என் நினைவும்

அழகு பதுமையே
வாய் திரந்து பேசு...,

ஊமையாகிவிடும்,
உன்னருகே,
எனக்கே சொந்தம்
மௌனம் மட்டும்...,

உனக்கென்ன
என் விழிகள் தானே
வெட்கத்தில் மூழ்கும்...,
நீ - என்னை விழுங்கும் வரை...,

செவ்விதழ் சிரிப்போடு,
சிதறும் முத்துக்கள்
எந்தன் சிந்தனைக்கு
தீபமாய்,
உன் நிழலைகூட
படமாக்கும் -என் நினைவோ
உன் ஒவ்வொறு அசைவையும்
மீண்டும் மீண்டும் ...,

நீ -யில்லா நேரத்தில்,
அந்த - அழகான
நாட்களின்
நினைவோடு...,
தனிமை - யில் என்னை
தவிக்க விடுகிறாயே....,



Monday, February 8, 2010

முதிர்கன்னிகள்


" எங்களுக்கு திருமணம் என்பதே பிடிக்காது "
---நாங்கள் பொய் சொல்லுவதே இல்லை ....,

Sunday, December 27, 2009

காதலின் கடைசி துளி ..,


முன்பனி புடைசூழ
மூழ்கி குளித்து,

முன்னிரவு கனவு மறந்து,
விரல் தொடும்
பனி ஓட - உருதிடும் உடலென,
மெல்லத்தான்,
தொட்டு துடைக்க...,

"சோ! வென்று
கொட்டிய மழையில்,
பூ விதழ் தாங்காது -
உடல் மெலிந்து , வளைந்து ,
பிரியும் போது
வாசத்தையும்
துளியோடு சேர்த்து,
தவறவிடும் - சோகத்தில்,
ஆடி அசைந்து,
விடை கொடுக்கும்
ஒரு துளியாய்,"

ஓடி வந்தது
அவள் கண்களில் ....

"நானும் விடைகொடுக்க பட்டேன்" ........
"காதலை மட்டும் சுமந்து".......

Friday, December 25, 2009

அனாதை




உயிரோடு நான் வாழ
உதிரத்தை கருவாக்கி
உயிர் கொடுத்த தாயே...,
கருவில் நான் - வாழ,
கவலையோடு நீ - வாழ,
- அதிகமாக உதைதேனோ - அம்மா?

மண்ணில் வீழ்ந்த என்னை,
மடியில் தாங்காமல் - வெருத்ததேனோ?
- கறுப்பாக இருந்தேனோ - அம்மா?



மார்போடு எனை தாங்கி
கள்ளிப்பால் கொடுத்தாலும்
விஷமென்று தெரிந்தாலும்
விரும்பியே கலம் பால் குடித்திருப்பேன்,
தொட்டிலில் எனை போட்டு
தூரசென்றாயே - அம்மா,
நான் செய்த குற்றமென்ன?

கொஞ்சி விளையாடும் வயது,
கொஞ்சிட நீ - யில்லை
கவலையோ, களிப்போ
கொஞ்சமும் - என்
நெஞ்சில் - ஈரமில்லை...,

மரத்து போன மனமாய்
மன்றாடி வேண்டுகிறேன் ...,

காலம் - எனை கடக்குமுன்பே,
என் எதிரே நீ வேண்டும்,
அன்று உன் மடியிலேயே
என் உயிரும் ....

Friday, December 18, 2009

"ஒரு ஞானியை போல்"
மழைநீருக்கு காத்திருக்கும்
விதைபோல்...
காதலிக்க தயாராகிவிட்டேன்...
"காத்திருக்க
கற்றுகொண்டேன்"
மறு ஜென்மம்
எப்போது?....