Friday, January 28, 2011

நீயும் என் நினைவும்

அழகு பதுமையே
வாய் திரந்து பேசு...,

ஊமையாகிவிடும்,
உன்னருகே,
எனக்கே சொந்தம்
மௌனம் மட்டும்...,

உனக்கென்ன
என் விழிகள் தானே
வெட்கத்தில் மூழ்கும்...,
நீ - என்னை விழுங்கும் வரை...,

செவ்விதழ் சிரிப்போடு,
சிதறும் முத்துக்கள்
எந்தன் சிந்தனைக்கு
தீபமாய்,
உன் நிழலைகூட
படமாக்கும் -என் நினைவோ
உன் ஒவ்வொறு அசைவையும்
மீண்டும் மீண்டும் ...,

நீ -யில்லா நேரத்தில்,
அந்த - அழகான
நாட்களின்
நினைவோடு...,
தனிமை - யில் என்னை
தவிக்க விடுகிறாயே....,



No comments:

Post a Comment