Thursday, November 26, 2009

வருத்தம்


இலைகளை
உதிர்த்து விட்டேன்,
பருவகாலம்
மாறுமென்று...
கிளைகளை
மடக்கி வைத்தேன்,
தூறல் கண்டால்
துளிர்துவிடலாமென்று ...
பாலுட்டா பாவியாக
தாய் - தன்னை
கூறாமல்
தவிர்த்து விட்டேன்
விதைகளை...
உள்ளிருக்கும்
வேர்களை
என்ன செய்ய
உயிர்பிக்க...

எழுச்சி


சிந்திய கண்ணீர்
சேமித்தால் போதும்,
சிந்து நதியில்
சிக்கதா முத்து - என்
செம்மண்ணில்
விளையும்..,
சிந்தித்து பார்...,
மணல் குவித்து
மண்டியிட்டு
மன்றாடுகிறாயே
காவேரியில்...,
கால்வாயை வெட்டு
தலை நகரில்
உன்னும் போது
உணர்வார்கள்
கரிக்கும் - நெல்
கண்ணீரில்
விளைந்ததேன்று ...

பிரிவு


பிரிவின்
கொடுமையை
உணர்கிறேன்...
உன் - நினைவை
சுமந்த
ஒவ்வொறு
நிமிடமும்...
மறைந்து விடு
பெண்னே...,
இமை மூடா
வலிக்கிறது
கண்கள்...,
தங்க மணல்
தரணிக்கு
தவழ்த
நிலவோடு - நின்
பாதமும்...,
விழ்ந்த
அலைகளில்
இதையங்கள்
தடுமாறி
இடம்மாறி
திரும்பினவோ...,
உன்னோடு
சேரும் வரை
உலகில் தேவை
ஒன்றும் இல்லை...,
உன்னை தவிர
உலகே தேவை
இல்லை...,


அந்தரத்தில்
அழகாக சிரிக்கின்றாய் - நிலவே ...,
நி - யாரையும்
காதலிக்கவில்லையா?...,