Friday, January 28, 2011

என் காதலி

மயக்கும் உன் விழிகள்
மௌனமாய் என்னை
கொள்ளுதடி...,

நீ - சிரிக்கும் அந்த
ஒவ்வொறு சிரிப்பிலும்,
ஏதோ ஒரு மாற்றம்
எனக்குள்ளே தோன்றுதடி...,

அன்று ஒருநாள்
என்னருகே -
அந்த அழகே
இயற்கை அழகை
ரசிக்கிறதே - என்று
இயற்கையே,
வெட்கத்தில் முழ்க...,

பூலோக பெண்களே,
வெட்கும் வகையில்
நேராக வந்துவிட்டயோ
என் கண்களுக்கு
விருந்தாய்!
தேவலோக தேவதையாக...,

அன்பே,
ஆயிரம் பேரின்
கனவு கன்னிதான் - நீ
வானுலகை வட்டமடிக்கும் பொது ...,

கவிதை எழுதும் போதும் கூட,
உன்னை வர்ணித்தல் தான்
இனிமை சேரும்,
காதலிக்கும் இளைஞ்சர்களுக்கு,

அந்த அழகு நிலவே,
உன்னை கண்ட நாள் முதல்,
இன்னும் அம்மாவாசையகவே...,

நிலவிற்கும்,
நெருப்பிற்கும்
பிறந்தவளே!
என்னை
நிம்மதியாக
இருக்க விடுவாயா?

1 comment: